சூரா 1: திறவு கோல் (அல்-பாத்திஹாஹ்)
[1:1] கடவுள்-ன் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்*.
[1:2] புகழ் அனைத்தும் கடவுள்-க்குரியது, பிரபஞ்சத்தின் இரட்சகர்.
அடிகுறிப்பு

[1:3] மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்.
[1:4] தீர்ப்பு நாளின் அதிபதி.
[1:5] உம்மை மட்டுமே நாங்கள் வழிபடுகின்றோம்; உம்மிடம் மட்டுமே நாங்கள் உதவி கேட்கின்றோம்.
[1:6] சரியான பாதையில் எங்களை வழி நடத்துவீராக;
[1:7] நீர் எவர்களுக்கு அருள்புரிந்தீரோ அவர்களுடைய பாதையில்; கோபத்திற்குள்ளானோருடையதல்ல, அன்றியும் வழி தவறியவர்களுடையதுமல்ல.