சூரா 103: பிற்பகல் (அல்-‘அஸ்ர்)
[103:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[103:1] பிற்பகலின் மீது சத்தியமாக.
[103:2] மனித இனம் முற்றிலும் நஷ்டமடைந்ததாக இருக்கின்றது.
[103:3] நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியான தொரு வாழ்வு நடத்திக் கொண்டும், மேலும் சத்தியத்தை உறுதியாகக் கடைப்பிடிக்குமாறு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து கொண்டும், மேலும் உறுதிப்பாட்டுடன் இருக்குமாறு ஒருவருக் கொருவர் உபதேசம் செய்து கொண்டும் இருப்பவர்களைத் தவிர.