சூரா 12க்குரிய அடிக்குறிப்புகள்

*12:1 குர்ஆனின் இந்த தலைப்பு எழுத்துக்கள் மகத்தானதொரு அற்புதத்தின் முக்கிய அங்கமாக அமைந்துள்ளது (பின் இணைப்பு 1).

*12:2 குர்ஆன் ஏன் அரபிமொழியில் வெளிப்படுத்தப்பட்டது? 41:44 மற்றும் பின் இணைப்பு 4 ஐ பார்க்கவும்.

*12:9 ஜோஸஃபின் கனவிலிருந்து பிரகாசமானதொரு எதிர்காலம் அவருக்கு விதிக்கப்பட்டிருந்தது என நாம் அறிந்து கொள்கின்றோம். இவ்விதமாக, அவருடைய விதியை முடிவு செய்ய அவருடைய சகோதரர்கள் சந்தித்துக் கொண்ட அதே வேளையில், அவருடைய விதி ஏற்கெனவே கடவுளால் முடிவு செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொன்றும் கடவுளால் செய்யப்படுகின்றது (8:17), மேலும் முன்னரே பதிவு செய்யப்பட்டும் உள்ளது (57:22).

*12:23 உண்மையில் அப்போது ஜோஸஃப் கடவுளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்த போதும், தன்னுடைய கணவரைப் பற்றித்தான் அவர் பேசிக் கொண்டிருக்கின்றார் என்று ஆளுநரின் மனைவி எண்ணிக்கொள்ளும் விதமாக அவர் இவ்வாசகத்தை மொழிந்தார்.

*12 :31 திருடுபவர் கரத்தைக் குறித்து 5:38லும் இதே வார்த்தைதான் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சூரா மற்றும் வசன எண்களின் கூட்டுத்தொகையும் (12+31 மற்றும் 5+38) ஒன்றாகவே உள்ளது. ஆகையால், திருடுபவரின் கரங்கள் அடையாளமிடப்பட வேண்டுமே அன்றி, சீர்குலைந்து போன இஸ்லாத்தில் செய்யப்படுவதைப் போல் துண்டிக்கப்பட்டு விடக்கூடாது (5:38ன் அடிக் குறிப்பையும் காண்க).

*12:42 ஜோஸஃப் தனக்காக மன்னரிடம் சிபாரிசு செய்யும்படி தன் தோழரிடம் யாசித்த போது, சிறையிலிருந்து காப்பாற்றப்படுவதற்காகக் கடவுளை அன்றி மற்றவர்களைச் சார்ந்திருப்பதை அவர் வெளிப்படுத்தினார். இது உண்மையானதொரு நம்பிக்கையாளருக்குப் பொருத்தமானதல்ல, மேலும் இத்தகையதொரு அபாயகரமான சறுக்கலுக்கு விலையாக ஜோஸஃப் சிறையில் சில வருடங்கள் இருக்க நேர்ந்தது. நமக்கு ஏற்படும் எந்தக் கஷ்டத்தையும் கடவுள் மட்டுமே நிவர்த்திக்க இயலும் என்பதை நாம் குர்ஆனிலிருந்து கற்றுக் கொள்கின்றோம். உண்மையான ஒரு நம்பிக்கையாளர் கடவுளிடம் பொறுப்பை ஒப்படைக்கின்றார், மேலும் முற்றிலும் அவரை மட்டுமே சார்ந்திருக்கின்றார் (1:5, 6:17, 8:17, 10:107).

* 12:93 இது எகிப்தில் இஸ்ரவேலின் சந்ததியினருடைய துவக்கத்தைக் குறிக்கின்றது. சில நுற்றாண்டுகள் கழித்து, மோஸஸ் அவர்களை எகிப்திற்கு வெளியே அழைத்து வந்தார்.