சூரா 16க்குரிய அடிக்குறிப்புகள்

*16:1 அனைத்தும் ஏற்கெனவே பதியப்பட்டதாக உள்ளது (57:22). பின் இணைப்பு 14 ஐயும் பார்க்கவும்.

*16: 30-32 நம் அனைவராலும் ஏற்கெனவே அனுபவிக்கப்பட்டுவிட்ட முதல் மரணத்தை மட்டுமே நன்னெறியாளர்கள் சுவைக்கின்றனர் (44:56ஐ பார்க்கவும்) இவ்வுலகில் அவர்களுடைய தவணை முடிவிற்கு வந்தவுடன் மரணிக்கச் செய்யும் வானவர்கள், முன்னொரு காலத்தில் ஆதாமும், ஏவாளும் வசித்த அந்தச் சுவனத்தை நோக்கி வருமாறு அவர்களிடம் அழைப்பு விடுக்கின்றனர், அவ்வளவுதான் ( 2:154, 3:169, 8:24, 22:58, 36:27).

*16: 30-32 நம் அனைவராலும் ஏற்கெனவே அனுபவிக்கப்பட்டுவிட்ட முதல் மரணத்தை மட்டுமே நன்னெறியாளர்கள் சுவைக்கின்றனர் (44:56ஐ பார்க்கவும்) இவ்வுலகில் அவர்களுடைய தவணை முடிவிற்கு வந்தவுடன் மரணிக்கச் செய்யும் வானவர்கள், முன்னொரு காலத்தில் ஆதாமும், ஏவாளும் வசித்த அந்தச் சுவனத்தை நோக்கி வருமாறு அவர்களிடம் அழைப்பு விடுக்கின்றனர், அவ்வளவுதான் ( 2:154, 3:169, 8:24, 22:58, 36:27).

*16:49 மனித உடல், அது ஒரு நம்பிக்கையாளருக்கோ அல்லது நம்பமறுப்பவருக்கோ உரியதாக இருந்த போதிலும், கடவுளுக்கு அடிபணி கின்றது; இதயத் துடிப்பு, நுரையீரல்களின் இயக்கம் மற்றும் வயிறுகளின் இயக்கம், இந்த அடிபணிதலைத் தெளிவாக விளக்கிக்காட்டுகின்றது.

*16:69 தேன், அதனுடைய அங்கீகரிக்கப்பட்ட ஊட்டச் சத்து மதிப்புக்களுடன், கூடுதலாக குறிப்பிட்ட ஒவ்வாமைகளுக்கும் மற்ற வியாதிகளுக்கும் நிவாரணமளிக்கும் ஒரு மருந்தாக விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

*16:71 மனிதர்கள் தங்களுடைய அதிகாரத்தை அந்த அளவிற்கு விட்டுக்கொடுத்துவிட மாட்டார்கள் எனும்போது, கடவுள் இதனைச் செய்ய வேண்டுமென்றும், மேலும் தனக்கே பங்குதாரர்களைப் படைத்துக் கொள்ள வேண்டும் என்றும் ஏன் எதிர்பார்க்கின்றனர்?

*16:93 நம்மிடையே உள்ள மீட்கப்படத் தகுதியான உண்மையான நம்பிக்கையாளர்களைக் கடவுள் அறிந்திருக்கின்றார். அதற்கேற்பவே, அவர்களை அவர் வழிநடத்துகின்றார், அதே சமயம் நம்ப மறுப்பதைத் தேர்ந்தெடுத்தோரை அவர் தடுத்து விடுகின்றார்.

*16:98 நம்முடைய மீட்சியானது நமக்குரிய கடவுளின் தூதுச் செய்தியாக குர்ஆனை அறிந்து கொள்வதன் மூலமே அடையக் கூடியதாக உள்ளது, மேலும் நாம் மீட்சியடைவதைத் தடுக்க தன்னால் இயன்ற அனைத்தையும் சாத்தான் செய்வான், எனவேதான் இக்கட்டளை.

*16:106 ஒரு துப்பாக்கியை உங்கள் தலையில் வைத்து கடவுள் மீது நீங்கள் நம்பிக்கையற்றவர் என்று கூற வேண்டுமென யாரேனும் உங்களுக்கு உத்தரவிட்டால் அவருடைய விருப்பத்தை நீங்கள் ஏற்றுக்கொள்ளலாம் என்று கடவுளின் ஞானம் விதிக்கின்றது. இதயத்தில் உள்ளது என்னவோ அது மட்டுமே கணக்கில் கொள்ளப்படும்.

* 16:115&118 மிகப்பெரும் நாசத்தை விளைவிக்கும் ட்ரிக்கிநெல்லா ஸ்பைரலிஸ் என்ற ட்ரிக்கினாஸிஸ் ஒட்டுண்ணி (அத்துடன் பன்றியின் நாடாப்புழு டேனியா சோலியம் ) பன்றியின் இறைச்சியில் தான் உயிர் வாழுமே அன்றிக் கொழுப்பில் அல்ல. ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் 1,50,000க்கும் அதிகமான மக்கள் இக்கிருமிகளின் தொற்றுக்களினால் அவதிப்படுகின்றனர். 6:145, 146 மற்றும் பின் இணைப்பு 16ஐ பார்க்கவும்.

* 16:115&118 மிகப்பெரும் நாசத்தை விளைவிக்கும் ட்ரிக்கிநெல்லா ஸ்பைரலிஸ் என்ற ட்ரிக்கினாஸிஸ் ஒட்டுண்ணி (அத்துடன் பன்றியின் நாடாப்புழு டேனியா சோலியம் ) பன்றியின் இறைச்சியில் தான் உயிர் வாழுமே அன்றிக் கொழுப்பில் அல்ல. ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் 1,50,000க்கும் அதிகமான மக்கள் இக்கிருமிகளின் தொற்றுக்களினால் அவதிப்படுகின்றனர். 6:145, 146 மற்றும் பின் இணைப்பு 16ஐ பார்க்கவும்.

*16:123 ஆப்ரஹாம் மூலம் நம்மை வந்தடைந்த எல்லா வழிபாட்டு நடைமுறைகளும், முஹம்மதின் காலத்தில் முழுமையாக இருந்தன என்பதை இது நமக்கு அறிவிக்கின்றது (22:78 மற்றும் பின் இணைப்பு 9 ஐ பார்க்கவும்).