சூரா 19க்குரிய அடிக்குறிப்புகள்

*19:1 இதுவே அதிகபட்ச எண்ணிக்கையிலான குர்ஆனின் தலைப்பு எழுத்துக்கள் ஆகும், ஏனெனில் இந்த சூரா, ஜானின் அற்புதப்பிறப்பு மற்றும் இயேசுவின் கன்னிப் பிறப்பு போன்றவற்றைக் குறித்துப் பேசுகின்றது, மேலும் இயேசுவைக் கடவுளின் மகனாகக் கருதும் மாபெரும் இறைநிந்தனையை கடுமையாகக் கண்டனம் செய்கின்றது. இந்த ஐந்து தலைப்பு எழுத்துக்களும் இவ்விஷயங்களுக்கு ஆதரவாக வலிமைவாய்ந்த கண்கூடான ஆதாரங்களை வழங்குகின்றன (பின் இணைப்பு 1 & 22 ஐ பார்க்கவும்).

*19:25 இவ்வாறாக, இயேசு செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபர் துவக்கத்தில் தான் பிறந்தார். அப்போது தான் மத்தியக் கிழக்கு நாடுகளில் மரங்களில் இருந்து உதிரும் அளவிற்குப் பேரீத்தம் பழங்கள் பழுக்கின்றன.

*19:36 இது ஜானின் சுவிசேஷம் 20:17ல் இயேசு கூறுவதாக வரும் வாசகத்திற்கு ஒப்பான ஒன்றாகும்.

*19:71 பின் இணைப்பு 11ல் விவரிக்கப்பட்டுள்ளபடி, நமது பிரபஞ்சத்திற்குக் கடவுளின் நேரடி வருகைக்கு முன்னர் நாம் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படுவோம். கடவுள் இல்லாத நிலையே நரகமாக இருப்பதால், அது நரகத்தை தற்காலிகமாக அனுபவிக்கும் ஒரு நிலையாக இருக்கும். கடவுள் வரும்போது (89:22) நன்னெறியாளர்கள் காப்பாற்றப்பட்டு விடுவார்கள். 19:72ஐ பார்க்கவும்.