சூரா 20க்குரிய அடிக்குறிப்புகள்

*20:1 குர்ஆனின் அச்சுறுத்துகின்ற கணித அற்புதத்தின் அங்கங்களான இந்த குர்ஆனிய தலைப்பு எழுத்துக்களின் பங்கு பின் இணைப்பு 1ல் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

*20:15 கடவுளின் இறுதித் தூதுச் செய்தியான குர்ஆனில் உலகின் முடிவு கொடுக்கப்பட்டுள்ளது (15:87).

*20:54 விண்வெளியில் மிதக்க விடப்பட்டிருக்கும் ‘பூமி என்ற விண்வெளிக்கப்பலில்’ உள்ள விண்வெளிப் பயணிகளாக நாம் இருக்கின்றோம் என்ற உண்மையை அறிவுத்திறன் உடையோர் வியந்து போற்றுவார்கள். இந்தத் தற்காலிக நெடும் விண்வெளிப்பயணத்தில் நாம் ஏறும்பொழுதே கடவுள் நமக்கு புதுப்பித்துக் கொள்ளக்கூடிய உணவு, தண்ணீர், செல்லப்பிராணிகள், வனவிலங்குகள், மற்றும் கால்நடைகள் ஆகியவற்றை வழங்கியுள்ளார். நம்முடைய விண்வெளி வீரர்களுக்கு நாம் வழங்கும் வாழ்வாதாரங்களுடன் ‘பூமியெனும் விண்வெளிக் கப்பலுக்குக்’ கடவுள் வழங்கியுள்ள வாழ்வாதாரங்களை ஒப்பிட்டுப் பாருங்கள் (பின் இணைப்பு 7).

*20:88&96 கடவுள் மோஸஸுடன் பேசிய இடத்திற்கு சாமிரியன் சென்று கடவுளின் வார்த்தைகளை எதிரொலித்த தூசியில் இருந்து ஒரு கைப்பிடியளவு அள்ளிக் கொண்டான். உருக்கிய தங்கத்துடன் இந்தத் தூசி கலக்கப்பட்ட போது, அந்தத் தங்கச்சிலை ஒரு கன்றுக்குட்டியின் சப்தத்தை அடையக் காரணமானது.

*20:88&96 கடவுள் மோஸஸுடன் பேசிய இடத்திற்கு சாமிரியன் சென்று கடவுளின் வார்த்தைகளை எதிரொலித்த தூசியில் இருந்து ஒரு கைப்பிடியளவு அள்ளிக் கொண்டான். உருக்கிய தங்கத்துடன் இந்தத் தூசி கலக்கப்பட்ட போது, அந்தத் தங்கச்சிலை ஒரு கன்றுக்குட்டியின் சப்தத்தை அடையக் காரணமானது.

*20:115 கடவுளின் பரிபூரணமான அதிகாரத்திற்கு எதிராகச் சாத்தான் சவால் விடுத்த போது (38:69), நீங்களும் நானும் சாத்தானுக் கெதிராக ஓர் உறுதியான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. சாத்தானுக்குப் பகிரங்கமாக கண்டனம் தெரிவிப்பதுடன், மேலும் கடவுளின் பரிபூரணமான அதிகாரத்தை ஆதரித்து நம்மை மீட்டுக் கொள்வதற்கு, இந்தப் பூமியின் மீது கடவுள் நமக்கு ஒரு வாய்ப்புத் தருகின்றார் (பின் இணைப்பு 7).