சூரா 21க்குரிய அடிக்குறிப்புகள்

*21:3 பைபிள் (மல்கியா 3:1) மற்றும் குர்ஆன் (3:81) ஆகியவை கடவுளின் உடன்படிக்கைத் தூதரின் வருகை குறித்து முன்னறிவிப்பு செய்திருந்த போதிலும், ‘மாபெரும் அற்புதங்களில் ஒன்றின்’ (74:30-35), ஆதரவுடன் அவர் தோன்றிய பொழுது, அவர் அலட்சியத்துடனும் மேலும் விரோதத்துடனும் எதிர்கொள்ளப்பட்டார். ஒவ்வொரு ‘புதிய’ சான்றும் எதிர்க்கப்படுகின்றது என்ற இறைவனின் உறுதியான கூற்று, குர்ஆனின் அற்புதத்திற்கு அரேபியர்களின் எதிர்ப்பால் நிரூபிக்கப்பட்டதாகி விட்டது (பின் இணைப்பு 1 & 2).

*21:28 பரிந்துரை எனும் கட்டுக்கதை, சாத்தானின் மிகத்திறன் வாய்ந்த தூண்டில் இரையாகும். (பின் இணைப்பு 8 ஐ பார்க்கவும்).

*21:30 படைப்பாளரின், சந்தேகத்திற்கப்பாற்பட்ட கணிதக் குறியீட்டின் மூலம் பெருவெடிப்புக் கோட்பாடு இப்போது ஆதரவளிக்கப்பட்டுள்ளது (பின் இணைப்பு1). இவ்விதமாக, இது இனியும் ஒரு கோட்பாடல்ல; இது ஒரு சட்டமாகும், நிரூபிக்கப்பட்டுவிட்ட ஓர் உண்மையாகும்.

*21:51 கடவுளைக் கண்டுபிடிக்கும் அளவிற்கு ஆப்ரஹாம் அவ்வளவு சாமர்த்தியசாலியாக இருந்தாரா, அல்லது, அவர் காப்பாற்றப்படத் தகுதியானவர் என்பதைக் கடவுள் அறிந்திருந்ததால், அவர் அந்த அறிவுத்திறனை அவருக்கு அளித்தாரா? இப்போது வெளிப்பட்டுள்ளபடி, நம்மிடையில் மீட்சிக்குத் தகுதியானவர்களை மீட்டுக் கொள்வதற்காகவே இந்த முழு உலகமும் படைக்கப் பட்டுள்ளது. மனிதர்கள் மற்றும் ஜின்கள் ஆகிய கலகக்காரர்கள், அனைவரும் கடவுளின் சாம்ராஜ்யத்தை விட்டு வெளியேற்றப்பட வேண்டும் என்று வானவர்கள் யோசனை கூறியபொழுது கடவுள், ‘நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன்’ (2:30) என்று கூறினார். அதே நேரத்தில், ஒரு கடவுளாக, சாத்தானின் தகுதியின்மையை இவ்வுலகம் நிரூபிக்கின்றது (பின் இணைப்பு 7).

*21:69 “பாதுகாப்பாகவும்” என்பதில்லாமல் “குளிர்ச்சியாக” என்று மட்டும் இருந்தால், அது ஆப்ரஹாம் உறைந்து போகக் காரணமாகி இருந்திருக்கும்.

*21:73 குர்ஆன் வெளிப்படுத்தப்பட்ட போது, மார்க்கக் கடமைகள் அனைத்தும் ஆப்ரஹாம் மூலமாக முன்னரே நிலை நாட்டப்பட்டிருந்தது. (2:128, 16:123, 22:78).

*21:90 குர்ஆன் முழுவதிலும் பன்மைப்பதத்தின் பயன்பாடு வானவர்களின் பங்களிப்பைக் குறிப்பிட்டுக் காட்டுகின்றது. 3:39 மற்றும் பைபிள் ஆகியவற்றிலிருந்து ஜானைப் பற்றிய நற்செய்தியை அவருக்கு அளித்த வகையில் , ஜக்கரியாவுடன் வானவர்கள் பெருமளவு நடவடிக்கைகளை மேற்கொண்டனர் என்பது தெளிவாகின்றது. பின் இணைப்பு 10 ஐ பார்க்கவும்.

*21:96 குர்ஆனின் கணிதக் குறியீட்டிற்கு நன்றி (பின் இணைப்பு 1), கி.பி.2270க்குள், அமெரிக்கா இஸ்லாத்தின் மையமாகி விடும், மேலும் பூகோளத்தைச் சுற்றிலும் கோடிக்கணக்கானோர் குர்ஆனின் மீது நம்பிக்கை கொண்டிருப்பார்கள் (9:33, 41:53, 48:28, 61:9). காக் மற்றும் மேகாக் (துஷ்ட சமூகங்களின் உருவகப் பெயர்கள்), மட்டுமே கடவுள் நம்பிக்கையின்மையின் கோட்டை முகப்பாக இருப்பார்கள், மேலும் அவர்கள் அடிபணிந்தோரைத் தாக்குவார்கள். அப்போதுதான் இவ்வுலகம் முடிவிற்கு வரும் (15:87, 18:94, பின் இணைப்பு 25). 18:94 & 21 :96 ஆகியவற்றில் ஒவ்வொரு சூராவின் முடிவிற்கும் 17 வசனங்கள் முன்னதாக காக் மற்றும் மேகாக் குறிப்பிடப்படுகின்றனர்; இது அவர்கள் தோன்றக் கூடிய நேரத்தைக் குறிக்கின்றதெனக் கொள்ளலாம்.