சூரா 23க்குரிய அடிக்குறிப்புகள்

*23:27 கதை சொல்லுபவர்கள் நோவாவின் சரித்திரத்தை பரிகாசத்திற்குரியதாக ஆக்கி விட்டார்கள். நோவாவின் படகு, மரக்கட்டைகளால் செய்யப்பட்டு, சாதாரணமான கயிறுகளால் ஒன்றாகக் கட்டப்பட்ட தட்டையானதொரு மரக்கலமேயாகும் (54:13), அவ்வெள்ளம் சாக்கடல் பகுதியைச் சுற்றியுள்ள இடங்களில் மட்டுமே ஏற்பட்டது, மேலும் அந்தப்பிராணிகள் நோவாவால் வளர்க்கப்பட்ட வீட்டுப் பிராணிகளே.

*23:84-89 கடவுளின் தன்மைகளை, உதாரணமாகக் கடவுள் ஒவ்வொன்றையும் கட்டுப்படுத்துகின்றார் (8:17) , என்பன போன்ற உண்மைகளை அடையாளம் கண்டு கொண்டால் மட்டுமே கடவுள் மீது நம்பிக்கை என்பது செல்லுபடியாகும். கடவுள் - ஐப் பற்றி அறியாத நம்பிக்கை கொண்டவர்கள் உண்மையில் நம்பிக்கையாளர்களே அல்ல. நம்பிக்கை கெண்டவர்களில் அதிகமானோர், வேதம் வழங்கப்பட்டவர்கள் மற்றும் மகான்கள் முதலான சக்தியற்ற இணைத் தெய்வங்களை வழிபடுவதன் மூலம், தங்களுடைய நம்பிக்கையைப் பயனற்றதாக ஆக்கி விடுகின்றனர் (6:106).