சூரா 30க்குரிய அடிக்குறிப்புகள்

*30:1 இதற்கு முன்னர் மர்மமாக இருந்து வந்த இந்த எழுத்துக்களின் விரிவான விளக்கத்திற்கு பின் இணைப்பு 1ஐபார்க்கவும்.

*30:30 கடவுளை மட்டுமே நம்முடைய இரட்சகராகவும், எஜமானராகவும் அடையாளம் கண்டுகொள்வது ஓர் இயற்கையான உள்ளுணர்வாகும். இத்தகையதொரு உள்ளுணர்வுடன்தான் நாம் இவ்வுலகில் பிறந்துள்ளோம். 7:172-173 மற்றும் பின் இணைப்பு 7 ஐ பார்க்கவும்.

*30:33 தங்களைக் குணப்படுத்தியதற்காக புனித ஜூடிற்கு நன்றி தெரிவித்து மக்கள் தினசரிகளில் கொடுக்கின்ற வகைப்படுத்தப்பட்ட விளம்பரங்களை நாம் காண்பது ஒரு பொதுவான உதாரணமாகும். அறுவைசிகிச்சைக்கு உட்படுத்தப்படுவதற்கு முன்னர், அவர்கள் தங்களைக் குணப்படுத்தும்படிக் கடவுளிடம் உண்மையாக இறைஞ்சிப் பிரார்த்திக்கின்றனர். ஆனால் அறுவை சிகிச்சை வெற்றியடைந்தவுடன், அவர்கள் புனித ஜூடிற்கு நன்றி தெரிவிக்கின்றனர்!!!