சூரா 31க்குரிய அடிக்குறிப்புகள்

*31:1 இந்த தலைப்பு எழுத்துக்களின் முக்கியமான பங்கை, பின் இணைப்பு 1ல் பார்க்கவும்.

*31:13 நீங்கள் ஒரு குழந்தையின் மீது அக்கறை எடுத்து, அவனுக்கு மிகச் சிறந்த கல்வியைக் கொடுத்து, மேலும் வாழ்க்கைக்காக அவனைத் தயார் செய்து, பிறகு அவன் மட்டும் வேறு எவரோ ஒருவருக்கு நன்றி தெரிவிப்பதை நீங்கள் காண்பீர்கள் என்றால், நீங்கள் எப்படி உணர்வீர்கள்? இணைத்தெய்வ வழிபாடு இவ்விதமானதேயாகும்; அநீதியானது ஆகும்.

*31:34 கடவுள் தன்னுடைய அறிவை அவர் நாடும்போதெல்லாம் வெளிப்படுத்துகின்றார். இவ்வசனத்திலிருந்து மழையையும், கருவின் பாலினத்தையும் முன்னரே கணிக்க நம்மால் இயலலாம் என்பதை நாம் கற்றுக் கொள்கின்றோம். ஆனால் நாம் மரணிக்கும் நேரத்தையோ அல்லது இடத்தையோ ஒருபோதும் அறிந்து கொள்ள முடியாது. 72:27க்கேற்ப தன்னுடைய உடன்படிக்கைத் தூதரின் மூலமாக உலக முடிவைக் கடவுள் வெளிப்படுத்தியுள்ளார். விபரங்களுக்கு, 15:87, 20:15 மற்றும் பின் இணைப்பு 25ஐ பார்க்கவும்.