சூரா 35க்குரிய அடிக்குறிப்புகள்

*35:12-13 விண்வெளிக்குள் நம் விண்வெளி வீரர்களை நாம் அனுப்பும்பொழுது, அவர்களுடைய உணவு, தண்ணீர், மற்றும் பிராணவாயு ஆகியவற்றின் குறைந்தபட்சத் தேவைகளைக் கொண்டு நாம் அவர்களுக்கு வழங்குகின்றோம். கோடிக்கணக்கான வருடங்களுக்கு முன்னர், சாத்தானுடைய இறைநிந்தனையின் பக்கம் நாம் சாய்ந்த போது (பின் இணைப்பு7), கடவுள், பூமியெனும் விண்கலத்தில் ஏற்றி நம்மை விண்வெளியில் மிதக்க விட்டுள்ளார். ஆனால், கடவுள் நமது விண்கலத்தில், ஏராளமான பல வகைப்பட்ட புதிய உணவுகளையும், தண்ணீரையும், பிராணவாயுவையும் மேலும் விண்வெளிப்பயணிகளான நமது இனப்பெருக்கத்தையும் புதுப்பித்துக் கொள்ள பிரமிப்பூட்டும் வழிமுறைகளை வழங்கியுள்ளார்.

*35:14 மக்கள் இயேசு, மேரி, முஹம்மது, அலி மற்றும் / அல்லது மகான்கள் ஆகியோரை இணைத்தெய்வ வழிபாடு செய்கின்றனர்; இத்தகைய இணைத்தெய்வங்கள் இறந்து விட்ட, அறியாத மேலும் முற்றிலும் சக்தியற்றவர்களாக உள்ளனர். அவர்கள் உயிருடன் இருந்த பொழுதும் கூட, அவர்கள் சக்தியற்றவர்களாகவே இருந்தனர்.

*35:24 “ரஷாத் கலீஃபா”வின் எழுத்தெண் மதிப்புடன் (1230), இந்த வசன எண்ணையும் (24) கூட்டினால், நமக்குக் கிடைக்கும் கூட்டுத் தொகை 19ன் பெருக்குத் தொகையாகும் (1230+24=1254=19 X 66).