சூரா 39க்குரிய அடிக்குறிப்புகள்

*39:5 பூமி உருண்டையானது என்பதை நமக்கு இந்த வசனம் தெளிவாகத் தெரியப்படுத்துகின்றது. “அவர் உருட்டுகின்றார்” என்பதற்குரிய அரபி வார்த்தை (யுகவ்வீர்) “பந்து” என்பதற்குரிய அரபி வார்த்தையான (குராஹ்) என்பதிலிருந்து பெறப்படுகின்றது. பூமியானது மிகச் சரியான உருண்டையாக இல்லாத காரணத்தால், அதன் வடிவத்தைப் பற்றிய ஒரு பிரத்தியேகக் குறிப்பு 79:30ல் கொடுக்கப்பட்டுள்ளது. குர்ஆனுடைய வெளிப்பாட்டிற்கு பல நூற்றாண்டுகள் கழித்து நாம் அறிந்து கொண்ட விஞ்ஞானத் தகவல்கள் குர்ஆனில் நிறைந்துள்ளன. பின் இணைப்பு 20 ஐப் பார்க்கவும்.

*39:45 இஸ்லாத்தின் முதல் தூணானது :“அஷ்ஹது அன்லாஇலாஹா இல்லல்லாஹ் (கடவுளுடன் வேறு தெய்வம் இல்லை),” எனப் பிரகடனம் செய்வதுதான் என்று 3:18ல் தெளிவான கட்டளை இருந்த போதிலும் , பெரும்பான்மையான “முஸ்லிம்கள்” முஹம்மதின் பெயரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றனர். முஹம்மதின் பெயரையோ அல்லது வேறு எந்தப் பெயரையோ சேர்த்துக் கொள்வதில் மகிழ்வடைவது, மறுவுலகின் மீதான நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துகின்றது என்று மகத்தான இந்த அளவுகோல் நம்மை எச்சரிக்கின்றது. 17:46க்குரிய அடிக்குறிப்பையும் பார்க்கவும்.

*39:67 நூறு கோடியிலான பால் வெளி மண்டலங்களுடனும், நூறுகோடி பல நூறு கோடி நட்சத்திரங்களுடனும், எண்ண முடியாத பல்லாயிரக்கணக்கான கோடி விண்ணகப் பொருட்களுடனும், பலநூறு கோடி ஒளி வருடங்கள் பயணிக்க வேண்டிய அளவு பரந்து விரிந்திருக்கும் நமது பிரபஞ்சமானது, ஏழு பிரபஞ்சங்களில் மிகவும் உள்ளமைந்ததாகவும் மேலும் மிகவும் சிறியதாகவும் உள்ள ஒன்றாகும். ஏழு பிரபஞ்சங்களின் அறிந்து கொள்ள முடியாத இந்த மிகப்பெரிய பரப்பு கடவுளின் கரத்தினுள் உள்ளது. கடவுளின் மகத்துவம் இத்தகையதாகும். பின் இணைப்பு 6ஐப் பார்க்கவும்.

*39:68 மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளின் நிகழ்வுகளின் வரிசைக்கிரமம், அடையாளமாகக் கொம்பு ஊதப்படுவதைக் கொண்டு துவங்குகின்றது. இரண்டாவது கொம்பு ஊதப்படுவது-மயக்கமடைவதிலிருந்து கடவுளால் விடுவிக்கப்பட்ட ஒரு படைப்பின் மூலம் - எல்லா மக்களும் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படுவதைக் குறிக்கின்றது; அவர்கள் இன்றைய பூமியின் மீது மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படுவார்கள். அப்போது கடவுளின் நேரடி வருகையின் மூலம் இந்தப் பூமி அழிக்கப்பட்டு விடும், பின்னர் புதியதொரு பூமியும், புதிய வானங்களும் படைக்கப்படும் (14:48). பின்னர் நாம் நம்முடைய வளர்ச்சிக்கேற்ப அடுக்கடுக்காக வகைப்படுத்தப்படுவோம் (பின் இணைப்பு 11).