சூரா 47க்குரிய அடிக்குறிப்புகள்

*47:18 இந்தக் குர்ஆன், இறுதி ஏற்பாடாக இருப்பதால், உலகத்தின் முடிவு கி.பி.2280 என்பதைச் சுட்டிக்காட்ட அவசியமான அனைத்து அடையாளங்களையும் வழங்குகின்றது. விபரங்களுக்கு பின் இணைப்பு 25 ஐப் பார்க்கவும்.

*47:19 குறிப்பிடத்தக்க வகையில், மார்க்கத்தின் “முதல் தூணானது” முஹம்மது என்ற தலைப்பு கொடுக்கப்பட்ட சூராவில் கூறப்படுகின்றது, மேலும் அது முற்றிலும் கடவுளுக்கு மட்டுமே அர்ப்பணிக்கப்பட்டதாக உள்ளது. முஹம்மதின் பெயர் அவருடைய விருப்பத்திற்கு விரோதமாக, அவரை இணைத்தெய்வ வழிபாடு செய்பவர்களால் சேர்க்கப்பட்டது.

*47:38 இந்தக் குர்ஆன் அரேபியர்களுக்கு, அவர்களுடைய மொழியில், 1400 வருடங்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது, ஆனால் அவர்கள் தெளிவாக இதனை ஏற்றுக் கொள்ள மறுத்தனர், மேலும் இது முழுமையானது என்பதில் நம்பிக்கை கொள்ள மறுத்தனர்; அவர்கள் ஹதீஸ் மற்றும் சுன்னாவை இட்டுக்கட்டிக் கொண்டனர்.