சூரா 53: நட்சத்திரங்கள் (அல்-நஜ்ம்)
[53:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[53:1] நட்சத்திரங்கள் வீழ்ந்து கொண்டே செல்வதைப் போல.*
அடிகுறிப்பு

[53:2] உங்களுடைய தோழர் (முஹம்மது) வழி தவறியவராக இருக்கவில்லை, அன்றி அவர், ஏமாற்றப்பட்டவராகவும் இருக்கவில்லை.
[53:3] அன்றி அவர் சுயவிருப்பத்தின் படி பேசவும் இல்லை.
[53:4] தெய்வீக உள்ளுணர்வாகவே அது இருந்தது.
[53:5] மிகுந்த சக்தியுடையவரால் எடுத்துக் கூறப் பட்டது.
[53:6] அனைத்து அதிகாரங்களையும் உடையவர். அவரது மிக உயரமான உயரத்தில் இருந்து.
[53:7] மிக உயரமான அடிவானத்தில்.
[53:8] கீழிறங்குவதன் மூலம் அவர் மிக அருகில் நெருங்கி வந்தார்.
[53:9] இயன்ற அளவு மிக அருகில் அவர் வரும் வரை.
[53:10] பின்னர் அவர் வெளிப்படுத்தப்பட இருந்த வற்றைத் தன் அடியாருக்கு வெளிப்படுத் தினார்.
[53:11] மனம், அது கண்டவற்றைப் பற்றி ஒரு போதும் பொய்யுரைக்கவில்லை.
[53:12] அவர் கண்டவற்றை நீங்கள் சந்தேகிக் கின்றீர்களா?
[53:13] அவர் மற்றொரு இறக்கத்திலும் அவரைக் கண்டார்.
[53:14] மிகவும் இறுதியான இடத்தில்.
[53:15] நிரந்தரமான சுவனம் அமைந்திருக்கும் இடத்தில்.
[53:16] அந்த இடம் முழுவதும் சூழப்பட்டிருந்தது.
[53:17] கண்களானது தடுமாறவில்லை, அன்றிக் குருடாகிப் போகவும் இல்லை.
[53:18] அவர் தன் இரட்சகரின் மிகப்பெரும் அத்தாட்சி களைக் கண்டார்.

பலவீனமான இணைத் தெய்வங்கள்  

[53:19] இதனை பெண் இணைத்தெய்வங்களான, அல்லாத் மற்றும் அல்-உஸ்ஸாவுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்.
[53:20] மேலும் மூன்றாவதான மனாத்துடனும்.
[53:21] இவற்றை மகள்களாக அவர் கொண்டிருக் கின்ற அதே சமயம், நீங்கள் மகன்களைக் கொண்டிருக்கின்றீர்களா?
[53:22] என்ன ஒரு அவமதிப்பு நிறைந்த பங்கீடு!
[53:23] இவை நீங்கள், உருவாக்கிக் கொண்ட பெயர் களேயன்றி வேறில்லை, நீங்களும் உங்களு டைய முன்னோர்களும். இத்தகையதொரு இறைநிந்தனைக்குக் கடவுள் ஒரு போதும் அங்கீகாரம் அளிக்கவில்லை. அவர்களுடைய இரட்சகரிடமிருந்து இதில், அவர்களுக்கு சத்திய வழிகாட்டல் வந்துள்ள பொழுது, அவர்கள் கற்பனைகளையும் மேலும் சுய விருப்பங்களையும் பின்பற்றுகின்றனர்.
[53:24] மனிதன் எதனைத்தான் விரும்புகின்றான்?
[53:25] மறுவுலகம், மற்றும் இவ்வுலகம் ஆகிய இரண்டும் கடவுள்-க்கே உரியவை.
[53:26] விண்ணில் உள்ள வானவர்கள் கூடப் பரிந்துரைக்கும் அதிகாரத்தைப் பெற்றிருக்க வில்லை. கடவுள் - ஆல் அனுமதிக்கப்பட்ட வர்கள் எவரென்றால், அவருடைய நாட்டம் மற்றும் அங்கீகாரம் ஆகியவற்றிற்கிணங்க செயல்படுகின்றவர்கள் மட்டுமே ஆவர்.
[53:27] மறுவுலகை நம்பமறுப்பவர்கள், வானவர் களுக்குப் பெண்பால் பெயர்களைக் கொடுத் திருக்கின்றனர்.
[53:28] அவர்களுக்கு இதுபற்றி எந்த அறிவும் இல்லை; அவர்கள் கற்பனை மட்டுமே செய்கின்றனர். கற்பனை என்பது சத்தியத்திற்கு மாற்று அல்ல.

உங்கள் நண்பர்களை கவனமாகத் தேர்ந்தெடுக்கவும்

[53:29] நம்முடைய செய்தியிலிருந்து திரும்பிக் கொள் வதுடன், இவ்வுலக வாழ்வில் மூழ்கிவிட்ட வர்களை நீர் புறக்கணித்து விட வேண்டும்.
[53:30] அவர்களுடைய அறிவின் எல்லை இதுதான். உம் இரட்சகர் தன்னுடைய பாதையிலிருந்து வழிதவறிச் சென்று விட்டவர்கள் யார் என்பதை முற்றிலும் அறிந்திருக்கின்றார், மேலும் வழிகாட்டப்பட்டவர்களையும் அவர் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.
[53:31] வானங்களில் உள்ள ஒவ்வொன்றும் மேலும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும் கடவுள் - க்கே உரியது. தீமை புரிபவர்களுக்கு அவர்களு டைய காரியங்களுக்குரிய கூலியை அவர் கொடுப்பார், மேலும் நன்னெறியாளர்களுக்கு அவர்களுடைய நன்னெறிக்குரிய வெகுமதி யளிப்பார்.
[53:32] அவர்கள் சிறு குற்றங்களைத் தவிர, பெரும் பாவங்களையும் மேலும் வரம்பு மீறுதல்களையும் தவிர்த்துக் கொள்வார்கள். உம்முடைய இரட்சகரின் மன்னிப்பு மிகவும் பெரியது ஆகும். பூமியிலிருந்து அவர் உங்களைத் துவக்கியது முதல், மேலும் நீங்கள் உங்களுடைய தாய்மார் களின் வயிறுகளில் கருக்களாக இருந்த சமயத்திலும் உங்களைப்பற்றி அவர் முற்றிலும் அறிந்தவராக இருந்து வந்திருக்கின்றார். ஆகையால், உங்களையே நீங்கள் உயர்த்திக் கொள்ளாதீர்கள்; நன்னெறியாளர்களை அவர் முற்றிலும் அறிந்தவராக இருக்கின்றார்.
[53:33] திரும்பிச் சென்று விட்ட ஒருவனை நீர் கவனித்திருக்கின்றீரா?
[53:34] அரிதாகவே அவன் தர்மம் கொடுத்தான், மேலும் அப்போதும் மிகக் குறைவாகவே.
[53:35] எதிர்காலத்தைப் பற்றிய அறிவை அவன் பெற்றிருக்கின்றானா? அவனால் அதனைப் பார்க்க முடிகின்றதா?
[53:36] மோஸஸின் வேதத்தில் உள்ள படிப்பினை களைப் பற்றி அவனுக்குத் தெரிவிக்கப் படவில்லையா?
[53:37] மேலும் நிறைவேற்றிய ஆப்ரஹாமைப் பற்றி?
[53:38] எந்த ஆன்மாவும் மற்றொரு ஆன்மாவின் பாவங்களைச் சுமக்காது.
[53:39] ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய காரியங் களுக்குப் பொறுப்பாளியாக இருக்கின்றான்.
[53:40] மேலும் ஒவ்வொருவருடைய காரியங்களும் எடுத்துக் காட்டப்படும்.
[53:41] பின்னர் அவர்களுடைய இத்தகைய காரியங் களுக்கு அவர்களுக்குக் கூலி முழுமையாகக் கொடுக்கப்படும்.
[53:42] இறுதி விதியானது உம்முடைய இரட்சகரிடமே உள்ளது.
[53:43] அவர்தான் உங்களைச் சிரிக்கவோ அல்லது அழவோ வைக்கின்றவர்.
[53:44] அவர்தான் மரணத்தையும் மற்றும் வாழ்வையும் கட்டுப்படுத்துகின்றவர்.

குழந்தையின் பால்வகையைக் கணவரே தீர்மானிக்கின்றார்

[53:45] அவர்தான் ஆண் மற்றும்பெண், இருவகை களையும் படைத்தவர்-
[53:46] விந்தின் ஒரு சிறிய துளியிலிருந்து.
[53:47] மீண்டும் உயிர்தெழுப்புதலை அவர் செயல் படுத்துவார்.
[53:48] அவர்தான் உங்களைச் செல்வந்தராகவோ அல்லது ஏழையாகவோ ஆக்குகின்றவர்.
[53:49] அவர்தான் நட்சத்திர மண்டலங்களின் இரட்சகர்.
[53:50] அவர்தான் பண்டைய ‘ஆதுகளை அழித்தவர்.
[53:51] மேலும் தமூதுகளைத் துடைத்தெடுத்தவர்.
[53:52] அத்துடன் அதற்கு முன்னர் நோவாவின் சமூகத்தாரையும்; அவர்கள் கெட்ட வரம்பு மீறுபவர்களாக இருந்தனர்.
[53:53] தீய சமூகங்கள் (ஸோடம் மற்றும் கொமர்ராஹ்) மிகவும் தாழ்ந்தவர்களாக இருந்தனர்.
[53:54] அதன் விளைவாக, அவர்கள் முற்றிலும் மறைந்து போயினர்.
[53:55] உங்களுடைய இரட்சகரின் அற்புதங்களில் எதனை நீங்கள் மறுக்க இயலும்.
[53:56] முந்தியவற்றைப் போல இது ஓர் எச்சரிக்கையேயாகும்.
[53:57] தவிர்த்துவிட இயலாதது உடனடியாக நிகழ இருக்கின்றது.
[53:58] கடவுள்-ஐத் தவிர எவரும் அதனை விடுவிக்க இயலாது.
[53:59] இந்த விஷயத்தை நீங்கள் சந்தேகிக் கின்றீர்களா?
[53:60] அழுவதற்குப் பதிலாக, நீங்கள் சிரித்துக் கொண்டிருக்கின்றீர்களா?
[53:61] உங்களுடைய வழிகளில் நீங்கள் பிடிவாதமாக இருக்கின்றீர்களா?
[53:62] கடவுள்-க்கு முன்னர், நீங்கள் சிரம்பணிந்து விழவும், வழிபடவும் வேண்டும்.