>சூரா 56: தவிர்க்க இயலாதது (அல்-வாகி‘ஆ)
[56:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[56:1] தவிர்க்க இயலாதது நிகழ்ந்தேறும் பொழுது.
[56:2] அது நிகழ்வதை எந்த ஒன்றும் தடுக்க இயலாது.
[56:3] அது சிலரைத் தாழ்த்தும், மேலும் மற்றவர்களை உயர்த்தும்.
[56:4] பூமி குலுக்கப்படும்.
[56:5] மலைகள் துடைத்தெடுக்கப்படும்.
[56:6] அவை ஒருபோதும் இருந்திராதவற்றைப் போல.
[56:7] மூன்று விதங்களில் நீங்கள் தரம் பிரிக்கப் படுவீர்கள்.
[56:8] பேரானந்தத்திற்குத் தகுதி பெற்றவர்கள் பேரானந்தத்தில் இருப்பார்கள்.
[56:9] பெருந்துன்பத்திற்குத் தகுதி பெற்றவர்கள் பெருந்துன்பத்தில் இருப்பார்கள்.
[56:10] பின்னர் அங்கே மேன்மையானவர்களில் மேன்மையானவர்களும் இருக்கின்றனர்.
[56:11] அவர்கள் தான் (கடவுளுக்கு) மிகவும் நெருக்கமானவர்களாக இருப்பார்கள்.
[56:12] பேரானந்தத் தோட்டங்களில்.
[56:13] முதல் தலைமுறையினரிலிருந்து ஏராள மானவர்கள்.*
அடிகுறிப்பு

[56:14] பிந்திய தலைமுறையினரிலிருந்து ஒரு சிலர்.
[56:15] ஆடம்பரமான இருக்கைகளில்.
[56:16] ஒவ்வொன்றையும் அனுபவித்தவாறு, அவர்கள் அருகருகில் உள்ளவர்களாக இருப்பார்கள்.
[56:17] அவர்களுக்குப் பணிபுரிபவர்கள் என்றென்றும் வாழ்கின்ற பணியாளர்களாக இருப்பார்கள்.
[56:18] கிண்ணங்கள், கூஜாக்கள் மற்றும் தூய்மை யான பானங்களுடன்.
[56:19] அவை ஒருபோதும் தீர்ந்து போகாது, அன்றி அவர்கள் சலிப்படையவும் மாட்டார்கள்.
[56:20] அவர்களுடைய விருப்பத்தின்படி தேர்ந்தெடுக் கின்ற பழங்கள்.
[56:21] அவர்கள் விரும்புகின்ற பறவைகளின் இறைச்சி.
[56:22] அழகிய ஜோடிகள்.
[56:23] பாதுகாக்கப்பட்ட முத்துக்களைப் போல்.
[56:24] அவர்களுடைய செயல்களுக்குரிய வெகுமதிகள்.
[56:25] அங்கே அவர்கள் அபத்தமான எதனையுமோ, அன்றிப் பாவகரமான கூற்றுக்களையோ ஒரு போதும் செவிமடுக்க மாட்டார்கள்.
[56:26] “அமைதி, அமைதி” என்று மட்டுமே கூறப்படும்.

கீழ் சுவனம்

[56:27] வலது புறத்தவர்கள், வலது புறத்தில் இருப்பார்கள்.
[56:28] செழிப்பான பழத்தோட்டங்களில்.
[56:29] மணம் பரப்பும் பழங்கள்.
[56:30] விரிந்த நிழல்.
[56:31] அபரிமிதமான தண்ணீர்.
[56:32] ஏராளமான பழங்கள்.
[56:33] ஒருபோதும் முடிவுறாதவை; ஒருபோதும் தடுக்கப்படாதவை.
[56:34] ஆடம்பரமான இருக்கைகள்.
[56:35] அவர்களுக்காக நாம் ஜோடிகளைப் படைக்கின்றோம்.
[56:36] முன்னர் ஒரு போதும் தொடப்பட்டிராதவர்கள்.
[56:37] மிகச் சரியான பொருத்தமுடையவர்கள்.
[56:38] வலது புறத்தில் இருப்பவர்களுக்காக.
[56:39] ஆரம்பகாலத் தலைமுறையினரிலிருந்து ஏராளமானவர்கள்.
[56:40] பிந்திய தலைமுறையினரிலிருந்து ஏராள மானவர்கள்.*
அடிகுறிப்பு

நரகம்

[56:41] இடது புறத்தவர்கள், இடது புறத்தில் இருப்பார்கள்.
[56:42] துன்பத்திலும் தீக்கனலிலும்.
[56:43] அவற்றின் நிழல் கூட வெப்பமானது.
[56:44] ஒருபோதும் குளுமை இராது, ஒரு போதும் தாங்க இயலாது.
[56:45] அவர்கள் செல்வந்தர்களாகவே இருந்து வந்தனர்.
[56:46] அவர்கள் மகத்தான இறை நிந்தனையில் பிடிவாதமாக இருந்தனர்.
[56:47] அவர்கள் கூறினர், “ நாம் இறந்து போய் மேலும் தூசியாகவும் மற்றும் எலும்புகளாகவும் மாறிய பின்னர், நாம் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப் படுவோமா?
[56:48] “இதில் நம்முடைய மூதாதையர்களும் உட்படு வார்களா?”
[56:49] கூறுவீராக, “ஆரம்ப காலத் தலைமுறை யினரும் பிந்திய தலைமுறையினரும்.
[56:50] “முன்னரே தீர்மானிக்கப்பட்டதொரு நாளின் ஒரு சந்திப்பிற்கென ஒன்று கூட்டப்படுவார்கள்.
[56:51] “அதன் பின்னர், நம்ப மறுக்கின்ற வழி தவறியோரே, நீங்கள்.
[56:52] “கசப்புத்தன்மையுள்ள மரங்களிலிருந்து உண்ணுவீர்கள்.
[56:53] “அதன் மூலம் உங்களுடைய வயிறுகளை நிரப்பிக் கொள்வீர்கள்.
[56:54] “பின்னர் அதற்கு மேல் நரக பானங்களை அருந்துவீர்கள்.
[56:55] “பின்னர் மணல் கலந்த பானங்களைச் சேர்த்துக் கொள்வீர்கள்”.
[56:56] தீர்ப்பு நாளன்று அவர்களுடைய பங்கு இத்தகையதேயாகும்.

சிந்தனைகள்

[56:57] நாமே உங்களைப் படைத்திருக்கின்றோம், உங்களால் நம்பிக்கை கொள்ள மட்டும் இயன்றால்!
[56:58] நீங்கள் உண்டு பண்ணுகின்ற விந்தினை நீங்கள் கவனித்திருக்கின்றீர்களா?
[56:59] அதனை நீங்கள் படைத்தீர்களா, அல்லது நாமா?
[56:60] உங்களுக்கு மரணத்தை நாம் முன்னரே தீர்மானித்து விட்டோம். எந்த ஒன்றும் நம்மைத் தடுக்க இயலாது-
[56:61] உங்களுடைய இடத்தில் புதிய தலைமுறையினரை நாம் மாற்றியமைப் பதிலிருந்தும், மேலும் நீங்கள் அறியாதவற்றை நிலை நிறுத்துவதில் இருந்தும்.
[56:62] முதல் படைப்பைப் பற்றி நீங்கள் அறிவீர்கள். உங்களுக்கு நினைவில்லையா?
[56:63] நீங்கள் அறுவடை செய்கின்ற பயிர்களை நீங்கள் கவனித்திருக்கின்றீர்களா?
[56:64] அதனை நீங்கள் வளர்த்தீர்களா, அல்லது நாமா?
[56:65] நாம் நாடினால், அதனைக் கூளமாக மாற்றி விட நம்மால் இயலும், பின்னர் நீங்கள் புலம்புவீர்கள்:
[56:66] “நாம் நஷ்டப்பட்டு விட்டோம்.
[56:67] “நாம் இழப்பிற்குள்ளாகி விட்டோம்.”
[56:68] நீங்கள் அருந்துகின்ற தண்ணீரை நீங்கள் கவனித்திருக்கின்றீர்களா?
[56:69] மேகங்களிலிருந்து அதனை நீங்கள் கீழே அனுப்பினீர்களா, அல்லது நாமா?
[56:70] நாம் நாடினால், அதனை உப்புச்சுவையுடைய தாக ஆக்கிவிட நம்மால் இயலும். நீங்கள் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும்.
[56:71] நீங்கள் மூட்டுகின்ற நெருப்பை நீங்கள் கவனித்திருக்கின்றீர்களா?
[56:72] அதன் மரத்தை நீங்கள் துவக்கினீர்களா, அல்லது நாமா?
[56:73] அதனை ஒரு நினைவூட்டலாகவும், மேலும் உபயோகிப்பவர்களுக்கு உபயோகமானதொரு சாதனமாகவும் நாம் தந்தோம்.
[56:74] மகத்தானவரான, உம்முடைய இரட்சகரின் பெயரை நீங்கள் துதிக்க வேண்டும்.

உண்மையானவர்கள் மட்டுமே குர்ஆனைப் புரிந்து கொள்ள இயலும்

[56:75] நட்சத்திரங்களின் நிலைகளின் மீது நான் ஆணையிடுகின்றேன்.
அடிகுறிப்பு

[56:76] இது ஒரு பிரமாணமாகும், நீங்கள் மட்டும் அறிந்திருந்தால், அது அச்சுறுத்துகின்ற தாகும்.*
[56:77] இது கண்ணியமானதொரு குர்ஆன் ஆகும்.
[56:78] பாதுகாக்கப்பட்டதொரு புத்தகத்தில் உள்ளது.
[56:79] உண்மையானவர்களைத் தவிர எவரும் இதனைக் கிரகிக்க இயலாது.*
அடிகுறிப்பு

[56:80] பிரபஞ்சத்தின் இரட்சகரிடமிருந்துள்ளதொரு வெளிப்பாடு.
[56:81] இந்த விவரிப்பையா நீங்கள் புறக்கணிக் கின்றீர்கள்?
[56:82] நம்பமறுப்பதையே நீங்கள் உங்களுடைய வேலையென நீங்கள் ஆக்கிக் கொண்டு விட்டீர்களா?
[56:83] நேரம் வரும்பொழுது மேலும் அது (உங்களு டைய ஆன்மா) உங்களுடைய தொண்டையை அடையும் பொழுது-
[56:84] அப்போது நீங்கள் சுற்றுமுற்றும் நோக்குவீர்கள்.
[56:85] நீங்கள் இருப்பதை விடவும் அதற்கு நெருக்க மாக நாம் இருக்கின்றோம், ஆனால் நீங்கள் பார்ப்பதில்லை.
[56:86] நீங்கள் எந்தக் கணக்கும் கொடுக்க கடமைப் பட்டிருக்கவில்லை என்பது உண்மையானால்-
[56:87] ஏன் (உங்களுடைய ஆன்மாவை) நீங்கள் பழைய நிலைக்கு கொண்டு செல்லக் கூடாது, நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால்?
[56:88] எனக்கு நெருக்கமானவர்களில் ஒருவராக அவர் இருந்தால் -
[56:89] பின்னர் சந்தோஷம், மலர்கள், மேலும் பேரானந்தத் தோட்டங்கள்.
[56:90] மேலும் வலப்புறத்தவர்களில் ஒருவராக அவர் இருந்தால்-
[56:91] வலப்புறத்தவர்களுக்குரிய பங்கு அமைதியே ஆகும்.
[56:92] ஆனால் நம்ப மறுப்பவர்களில், வழிதவறியவர் களில் ஒருவனாக அவன் இருந்தால் -
[56:93] பின்னர் தீக்கனலின் ஒரு தங்குமிடம்-
[56:94] மேலும் நரகத்தில் எரிதல்.
[56:95] இதுவே பூரணமான சத்தியமாகும்.
[56:96] மகத்தானவரான, உம்முடைய இரட்சகரின் பெயரை நீங்கள் துதிக்க வேண்டும்.