சூரா 72: ஜின்கள் (அல்-ஜின்)
[72:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[72:1] கூறுவீராக, “எனக்கு உள்ளுணர்வு அளிக்கப் பட்டது. ஜின்களில் ஒரு கூட்டத்தார் கவனத்துடன் செவியேற்றனர், பின்னர் கூறினர், ‘நாங்கள் ஓர் அற்புதமான குர்ஆனை செவியேற்றோம்.*
அடிகுறிப்பு

[72:2] “ ‘அது நன்னெறியின் பால் வழிநடத்துகின்றது, மேலும் நாங்கள் அதில் நம்பிக்கை கொண்டு விட்டோம்; எங்கள் இரட்சகருடன் இணைத் தெய்வங்கள் வேறு எதனையும் நாங்கள் ஒருபோதும் அமைத்துக் கொள்ள மாட்டோம்.
[72:3] “ ‘நம்முடைய ஒரே இரட்சகர் மிகவும் உயர் வானவர் ஆவார். அவர் ஒரு ஜோடியையோ, அன்றி ஒரு மகனையோ ஒருபோதும் கொண்டி ருந்ததில்லை.
[72:4] “ ‘நமக்கிடையில் மூடர்கள் தான் கடவுள்-ஐப் பற்றி இத்தகைய பொருத்தம் அற்றவற்றைக் கூறிக் கொண்டிருந்தனர்.
[72:5] “ ‘மனிதர்களோ, அன்றி ஜின்களோ கடவுள்-ஐப் பற்றிப் பொய்களைக் கூறுதல் சாத்தியமல்ல என்று நாம் எண்ணிக் கொண்டிருந்தோம்.
[72:6] “ ‘மனித இனத்தினர் ஜின் இனத்தினர் மூலம் ஆற்றலைத் தேடிக் கொண்டிருந்தனர், ஆனால் அவர்கள் ஏராளமானதொரு கஷ்டத்தைக் கொண்டு மட்டுமே அவர்களை வருத்தினர்.
[72:7] “ ‘கடவுள் மற்றொரு (தூதரை) அனுப்ப மாட்டார் என்று நீங்கள் நினைத்ததைப் போலவே, அவர்களும் நினைத்தனர்.
[72:8] “ ‘நாம் வானத்தைத் தொட்டுப் பார்த்தோம், மேலும் அது எதிர்க்க இயலாத காவலர்களாலும் மேலும் ஏவுகணைகளாலும் நிரம்பியிருந்ததைக் கண்டோம்.
[72:9] “ ‘உளவறிவதற்காக நாம் அங்கே அமரக் கூடியவர்களாக இருந்தோம். ஒட்டுக் கேட் கின்ற எவரொருவரும் சக்திநிறைந்ததொரு ஏவுகணையால் துரத்தப்படுகின்றார்.
[72:10] “‘பூமியில் வசிப்பவர்களுக்கு ஏதேனும் கெட்டது நாடப்பட்டுள்ளதா, அல்லது அவர்களுடைய இரட்சகர் அவர்களை மீட்டுக் கொள்ள நாடியுள்ளாரா என்பதைப் பற்றி நமக்கு எதுவும் தெரியாது.
[72:11] “ ‘நம்மில் சிலர் நன்னெறியாளர்களாக உள்ள னர், மேலும் சிலர் நன்னெறியாளர்களை விட தாழ்ந்தவர்களாக உள்ளனர்; நாம் வெவ்வேறு வழிகளைப் பின்பற்றுகின்றோம்.
[72:12] “ ‘பூமியில் கடவுள்-இடமிருந்து நாம் ஒரு போதும் ஓடிச் சென்று விட இயலாது என்பதை நாம் முற்றிலும் நன்கறிந்திருக்கிறோம்; நாம் ஒருபோதும் ஓடிச் சென்று தப்பித்து விட இயலாது.
[72:13] “ ‘வழிகாட்டலை நாங்கள் செவியேற்ற போது, நாங்கள் அதில் நம்பிக்கை கொண்டோம். தன்னுடைய இரட்சகர் மீது நம்பிக்கை கொள்ளும் எவரொரு வரும் எந்த அநியாயத் திற்கோ அன்றி எந்தக் கஷ்டத்திற்கோ, ஒருபோதும் அஞ்சமாட்டார்.
[72:14] “ ‘நம்மிடையே அடிபணிந்தோரும் உள்ளனர், மேலும் நம்மிடையே சமரசம் செய்து கொள் வோரும் உள்ளனர்’.” அடிபணிந்தோரைப் பொறுத்தவரை, அவர்கள் சரியான பாதையில் உள்ளனர்.
[72:15] சமரசம் செய்து கொள்வோரைப் பொறுத்த வரை, அவர்கள் ஜஹன்னாவிற்கான எரி பொருளாக இருப்பார்கள்.
[72:16] அவர்கள் சரியான பாதையில் தொடர்ந்து நீடித்திருந்தால், அபரிமிதமான தண்ணீரைக் கொண்டு அவர்களுக்கு நாம் அருள்பாலிப்போம்.
[72:17] அவர்கள் அனைவரையும் நிச்சயமாக நாம் சோதிப்போம். தன் இரட்சகருடைய தூதுச் செய்தியை புறக்கணிப்பவனைப் பொறுத்தவரை, எப்பொழுதும் அதிகரித்துக் கொண்டேயிருக் கின்ற தண்டனையின் பால் அவர் அவனைச் செலுத்துவார்.
[72:18] வழிபாட்டுத் தலங்கள் கடவுள்-க்குரியவை; கடவுள்-உடன் வேறு எவரொருவரையும் அழைக்காதீர்கள்.

கடவுளின் உடன்படிக்கைத் தூதர்*

[72:19] கடவுள்-ன் அடியார்* அவரை மட்டும் ஆதரித்த போது, அவரை எதிர்ப்பதற்காக ஏறத் தாழ அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டனர்.
[72:20] “நான் என்னுடைய இரட்சகரை மட்டுமே வழிபடு கின்றேன்; அவருடன் வேறு எந்த இணைத் தெய்வங்களையும் நான் ஒருபோதும் அமைத் துக் கொள்வதில்லை” என்று கூறுவீராக.
[72:21] “உங்களுக்குத் தீங்கிழைக்கவோ, அன்றி உங்களை வழி நடத்தவோ எந்தச் சக்தியையும் நான் பெற்றிருக்கவில்லை,” என்று கூறுவீராக.
[72:22] கூறுவீராக, “கடவுள்-இடமிருந்து எவரொரு வரும் என்னைக் காப்பாற்ற இயலாது, அன்றி அவரைத் தவிர வேறு எந்தப் புகலிடத்தையும் என்னால் காண இயலாது.
[72:23] “நான் கடவுள்-ன் பிரகடனங்களையும் தூதுச் செய்திகளையும் அறிவிக்கின்றேன்”. கடவுள் மற்றும் அவருடைய தூதருக்குக் கீழ்ப்படிய மறுப்பவர்கள் நரகத்தின் நெருப்பிற்கு உள்ளா கின்றனர், அங்கே அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.
[72:24] அவர்களுக்காகக் காத்துக் கொண்டிருப் பவற்றை அவர்கள் கண்டவுடன், மெய்யாகவே பலம் குன்றியவர்கள், மேலும் எண்ணிக்கையில் குறைவானவர்கள் யார் என அவர்கள் கண்டு கொள்வார்கள்.
[72:25] “உங்களுக்கு வாக்களிக்கப்பட்டிருப்பது விரை வில் நிகழ்ந்தேறுமா, அல்லது என் இரட்சகர் அதனை சிறிதொரு காலம் தாமதப்படுத்து வாரா என்பதை நான் அறியமாட்டேன்” என்று கூறுவீராக.
[72:26] அவர்தான் எதிர்காலத்தை அறிந்தவர்; எதிர் காலத்தை அவர் எவரொருவருக்கும் வெளிப் படுத்த மாட்டார்.
[72:27] தான் தேர்ந்தெடுக்கின்ற* ஒரு தூதருக்கு மட்டுமே, கடந்த காலம் மற்றும் எதிர்காலத்தி லிருந்து, குறிப்பிட்ட செய்திகளை* அவர் வெளிப்படுத்துவார்.
[72:28] இது, அவர்கள் தங்களுடைய இரட்சகரின் தூதுச் செய்திகளை ஒப்படைத்து விட்டார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக வேயாகும். அவர்களிடம் இருப்பவற்றை அவர் முற்றிலும் அறிந்திருக்கின்றார். அவர் அனைத் துப் பொருட்களின் எண்ணிக்கைகளையும் கணக்கிட்டு வைத்துள்ளார்.
அடிகுறிப்பு