சூரா 81: சுருட்டுதல் (அல்-தக்வீர்
[81:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[81:1] சூரியன் சுருட்டப்படும் பொழுது.
[81:2] நட்சத்திரங்கள் ஒன்றோடொன்று மோதிக் கொள்கின்றன.
[81:3] மலைகள் துடைத்தெடுக்கப்படுகின்றன.
[81:4] இனப்பெருக்கம் நிறுத்தப்படுகின்றது.
[81:5] மிருகங்கள் வரவழைக்கப்படுகின்றன.
[81:6] பெருங்கடல்கள் தீப்பற்றி எரியச் செய்யப் படுகின்றன.
[81:7] ஆன்மாக்கள் தங்களுடைய உடல்களுக்குள் மீண்டும் வைக்கப்படுகின்றன.
[81:8] உயிரோடு புதைக்கப்பட்ட சிறுமியிடம் கேட்கப்படுகின்றது:
[81:9] எந்தக் குற்றத்திற்காக அவள் கொலை செய்யப்பட்டாள்?
[81:10] பதிவேடுகள் தெரியப்படுத்தப்படுகின்றன.
[81:11] வானம் அகற்றப்படுகின்றது.
[81:12] நரகம் பற்ற வைக்கப்படுகின்றது.
[81:13] சுவனம் முன்னால் கொண்டுவரப்படுகின்றது.
[81:14] ஒவ்வொரு ஆன்மாவும் அது கொண்டு வந்த ஒவ்வொன்றையும் அறிந்து கொள்ளும்.

கடவுளின் உடன்படிக்கைத் தூதர்

[81:15] நட்சத்திர மண்டலங்களின் மீது நான் முறைப்படி சத்தியம் செய்கின்றேன்.
[81:16] மிகச்சரியாக அவற்றின் சுற்றுப்பாதையில் ஓடிக்கொண்டிருக்கின்றன.
[81:17] விழுகின்ற இரவின் மீது சத்தியமாக.
[81:18] மேலும் காலைப் பொழுது அது மூச்சு விடும் பொழுது.
[81:19] இது கண்ணியமானதொரு தூதரின் கூற்றா கும்*.
அடிகுறிப்பு

[81:20] அரியாசனத்தைக் கொண்டிருப்பவரால் அங்கீ கரிக்கப்பட்டவர், முற்றிலும் ஆதரவளிக்கப் பட்டவர்.
[81:21] அவர் கீழ்ப்படியவும் மேலும் நம்பிக்கை கொள்ளப்படவும் வேண்டும்.
[81:22] உங்களுடைய தோழர் (ரஷாத்) புத்தி சுவாதீனமில்லாதவர் அல்ல.
[81:23] உயர்ந்த தொடுவானத்தில் அவர் அவரைக் கண்டார்*.
அடிகுறிப்பு

[81:24] அவர் எந்தச் செய்தியையும் தடுத்து நிறுத்திக் கொள்ளவில்லை.
[81:25] இது விலக்கி வைக்கப்பட்ட சாத்தானின் பேச்சு அல்ல.
[81:26] பின் இப்போது, நீங்கள் எங்கு செல்வீர்கள்?
[81:27] இது மக்கள் அனைவருக்குமான ஒரு தூதுச் செய்தியாகும்.
[81:28] நேராகச் செல்ல விரும்புபவர்களுக்காக.
[81:29] நீங்கள் நாடுவது எதுவானாலும் அது, பிரபஞ்சத்தின் இரட்சகரான கடவுள்-ன் நாட்டத்திற்கேற்பவே உள்ளது.