சூரா 96: கரு (அல்-‘அலக்)
[96:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[96:1] படிப்பீராக, படைத்த, உம்முடைய இரட்சகரின் பெயரால்.*
அடிகுறிப்பு

[96:2] ஒரு கருவிலிருந்து மனிதனை அவர் படைத்தார்.
[96:3] படிப்பீராக, மேலும் உம்முடைய இரட்சகர், மிகவும் உயர்வானவர்.
[96:4] பேனாவெனும் சாதனத்தின் மூலம் கற்றுக் கொடுக்கின்றார்.
[96:5] அவன் ஒருபோதும் அறிந்திராதவற்றை மனிதனுக்கு அவர் கற்றுக் கொடுக்கின்றார்.
[96:6] உண்மையில், மனிதன் வரம்பு மீறுகின்றான்.
[96:7] அவன் செல்வந்தனாக ஆகும் பொழுது.
[96:8] இறுதி விதியானது உம்முடைய இரட்சகரிடமே உள்ளது.
[96:9] தடை செய்கின்ற ஒருவனை நீர் பார்த்தீரா.
[96:10] தொழுவதை விட்டும் மற்றவர்களை?
[96:11] வழிகாட்டலைப் பின்பற்றுவது அவனுக்கு மிகவும் நல்லதல்லவா?
[96:12] அல்லது நன்னெறியை ஆதரிப்பது?
[96:13] அவன் நம்பமறுத்து மேலும் திரும்பிச் சென்று விட்டால்.
[96:14] கடவுள் பார்க்கின்றார் என்பதை அவன் உணர்ந்து கொள்ளவில்லையா?
[96:15] உண்மையில், அவன் விலகிக் கொள்ளா விட்டால், அவனை முன்நெற்றி முடியால் பிடித்துக்கொள்வோம்.
[96:16] நம்ப மறுக்கின்ற மேலும் பாவகரமானதொரு முன் நெற்றி முடி.
[96:17] தன்னுடைய உதவியாளர்களை அப்பொழுது அவன் அழைத்துக் கொள்ளட்டும்.
[96:18] நரகத்தின் காவலர்களை நாம் அழைப்போம்.
[96:19] அவனுக்கு நீர் கீழ்ப்படிய வேண்டாம்; நீர் சிரம்பணிந்து வீழ்ந்து மேலும் நெருங்கி வர வேண்டும்.